அன்புடையீர்,
உபயகுச்சலோபரி.நிகழும் மங்களகரமான் விரோதி வருடம், ஆவணி மாதம், 12ம் நாளும் புனித ரமலான் மாதம் 7ம் நாளும் ஆகஸ்ட் மாதம் 28ம் நாளுமான வெள்ளிக்கிழமையன்று ஏதோ ஒரு நட்சத்திரமும் ஒரு கெரகமும் மரணயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், மாலை 7.30 மணிக்குமேல் 7.31 மணிக்குள் ஏதோ ஒரு லக்கினத்தில், இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கலைஞர் தொலைக்காட்சியில்,பதிவுலக பட்டிஷ்டா,தமிழக விடிவெள்ளி,முகவையின் முத்து,நம் வலையுலக சொத்து,சின்னப் பகவதி, சிங்காரத் தமிழன், அண்ணன்
ஜே.கே.ஆர்.எம்.பி. அவர்கள் நடித்த சூப்பர் டூப்பர் மெகா ஹிட் திரைப்படமான "நாயகன்"(THE REAL HERO) திரைப்படம் திரையிட இருப்பதால், தாங்கள் தங்கள் சுற்றம் சூழ, டிவி முன்பு அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று கலைஞர் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படத்தைப் பார்த்து பிறவிப்பயனையும் அடையலாம்.
தங்களன்புள்ள,
ஜே.கே.ஆர். எம்.பி.மன்ற நிர்வாகிகள்.
வலையுலகம்.
அவ்வண்ணமே கோரும்,
கலைஞர் தொலைக்காட்சி.
"கலை"யுலகம்.
டிஸ்கி: இப்படத்தை 7.30 மணிக்கு திரையிடுவதில் எவ்வித உள்குத்து இல்லையென்று கலைஞர் டிவி,நமக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
Friday, August 21, 2009
மோட்சம் அடைய எளிய வழி, (வலியுடன்).
Posted by Raju 12 comments
Labels: கலைஞர் டிவி, நிகழ்வுகள்.நாயகன்
Tuesday, July 21, 2009
ஜே.கே.ரித்திஷ் M.P. யிடம் பிடித்த 10.
* நாயகன் பட கிளைமெக்ஸுல மீன் தொட்டிய துப்பாக்கியால, கரெக்டா அந்த புல்லட்டோட டயாமீட்டர் அளவுக்கு ஒரு ஓட்டை போடுவீங்களே அது பிடிக்கும்.
* நீங்க துப்பாக்கி புடிக்கிற அழகுக்காகவே நாயகன் படத்தை நூறுதடவை பார்க்கலாம்.
* ஆட்டோ டிரைவர்ல இருந்து ஆளுநர் வரைக்கும் அள்ளி அள்ளிக் குடுப்பீங்களே,அது பிடிக்கும்.
* கானல் நீர் படத்து டிரையிலர்ல இன்ட்ரோ சீன்ல அப்ப்டியே பேன்ட் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்து வருவீங்களே, அத பிடிக்காதவன் எவனாச்சும் இருக்க முடியுமா..
* யாரோ ஒரு பிரபல அரசியல் தலைவரிடம் "அமைச்சர் பதவிக்கி எவ்ளோ செலவாகும்..?"ன்னு நீங்க கேட்டீங்களாமே.
அந்த அப்பாவித்தனம் உஙகளத் தவிர வேற யாருக்கு வரும் தலைவா..?
* நீங்க நாயகன் படத்துல, சங்கீதாவ காப்பத்துற அந்த அலட்டலில்லாத நடிப்புக்காக எத்தனை தடவை வேணும்ன்னாலும், யாரு வேணும்ன்னாலும் சங்கீதாவக் கடத்திட்டுப் போகலாம்.
* உங்களோட அரசியல் போஸ்டருக்கு நீங்க அனுமதிச்சு ரசிச்சு போடுற வசனத்துக்கே, நாங்களெல்லாம் அடிமை தலைவரே. மறக்க முடியுமா அந்த "வடபழனி வாக்காளப் பெருமக்களை".
* படத்துல நடிக்கிற அந்த கேரக்டராவே மாறுற திறமையும் அழகும் உங்களத் தவிர வேற யாருக்கு வரும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்..ஸாரி..ஸாரி..கேப்போம்.
* என்னாதான் எல்லாரும் ஓட்டுனாலும் தைரியமா "வேட்டைப்புலி" வேலைகளப் பாத்துக்குட்டி இருக்கீங்களே, அந்த அசாத்திய தைரியம் பிடிக்கும்.
* பத்தாவதா நிறைய வருது. உங்களோட காஸ்ட்யூம் , உங்க ஹுயூமர் சென்ஸ், அரசியல் நடவடிக்கைகள்ன்னு எல்லாமே பிடிக்கும் தலைவரே.
என்றென்றும் உங்கள் வழியில் டக்ளஸ்...
Posted by Raju 11 comments
Labels: மற்றவை.
Saturday, July 11, 2009
யாருடா அது ஆன்டர்சன்னு...!
யாரோ சாம் ஆன்டர்சன்னாம், ஜீ டிவியாம், அதுல இன்னைக்கு நைட்டு அந்தாளு நடிச்ச, யாரோ யாரோடி, (ஸ்டெப்னீ)படம் போடுறாங்களாம்.போடட்டும்.தப்பில்லை. ஆனா, அந்தாளை எங்க அண்ணன் கூட ஒப்பிட்டு, அடுத்த வீரத்தளபதி,வருங்கால முதல்வர்,வருங்கால அமெரிக்க பிரதமர்ன்னு சொன்னீங்க.அவ்வளவுதான்,நாங்கல்லாம் "நாயகன்" படத்தையே கலைஞர் டி.வியில போட்டவிய்ங்க. எங்க அண்ணன் ஏதோ கொஞ்ச காலம் அரசியல், எம்.பி., பிரச்சாரம், பதவியேற்பு, மக்கள் குறை கேட்புன்னு பிஸியா இருந்தாக்கா, நீங்க என்னாடான்னா, அதுக்குள்ள புது ஆளை ஃபீல்டுல இறக்கப் பாக்குறீங்களா..? பிச்சு புடுவேன் பிச்சு. நாங்களும் ரெடியாயிட்டிதான்டி இருக்கோம். தயாரியிட்டு இருக்கு "வேட்டைப்புலி". அனுஷ்கா வேட்டைக்காரன்லயும் பாவனா அசல்லயும் பிஸியா இருக்குறதுனால் எங்க அண்ணனுக்கு சரியான ஜோடி இன்னும் அமையல. அதுக்குக்காகத்தான் வெயிட்டிங். மவனே, இன்னும் கொஞ்ச நாள்ல டரியலாகப் போறீங்க..!
எங்க அண்ணன் டெல்லி போயிட்டார்ல. அதனால நாங்க பாலிவுட்லயும் கால் வைக்கப் போறோம். ஆமாப்பு.."வேட்டைப்புலி"ய "துஷ்மன்"ன்ற பேர்ல ஹிந்திலயும் டப்பிங் பண்ணி வெளியிடப் போறோம். பத்திக்கிச்சுடா பாலிவுட்டு. சும்மா ஷாரூக்கான், அமீர்கான்லாம் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடிப் போயிரணும் ஓடி.. இப்போ த்ரிஷாவும் பாலிவுட்டுக்கு போயிருக்குறதுனால அவங்களும் கதாநாயகி லிஸ்ட்ல இருக்காங்க என்பதையும் இங்கு தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.Of Course ஜெனீலியா also.
ரத்தம் கொதிக்கின்றது. நாங்கள் ஓபாமாவேயே எங்கள் அண்ண்னோடு ஒப்பிடுவதை எங்கள் புகழுக்கு இழுக்கு என கருதிக் கொண்டிருக்கின்றோம். இந் நேரத்தில் சாம் ஆன்டர்சன்னை எங்களோடு ஒப்பிடுவது எங்களுக்கு மன சங்கடத்தையே தருகின்றது.இப்பிடி அகிலத்தையே இன்னும் சிறிது காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகின்ற எங்கள் தன்னிகரற்ற தலைவனை "சாம் ஆனடர்சன்"னோடு ஒப்பிட்டு எங்கள் அண்ணனின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதை ஒருக்காலும் தாங்க மற்றும் அனுமதிக்க முடியாது என்பதை எங்கள் மாமன்றத்தின் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.இவை அனைத்தும் கட்டாயம் எதிர்கட்சிகளின் சதியாகத்தான் இருக்கும் என 48422655வது ஒன்றியக் குழு தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.
என்னைக்குமே நாங்கதான்டா டாப்பு.
மத்தவனெலாம் டூப்பு.
வருது பாரு வேட்டைப்புலி.
வந்தா,மவனே நீ காலி..
எங்க அண்ணன்தாண்டா சிங்கம்.
தமிழ்நாட்டின் தங்கம்.
சீண்டிப் பாக்காத சிங்கத்த..
தாங்க முடியாது அதோட சீற்றத்த.
முடிஞ்சு போகும் ஓங்கத.
எதிர்த்து நிக்காத முன்னாடி.
அப்பறமா, ஃபீல் பண்ணுவ பின்னாடி.
இது சிங்கத்தோட கோட்டைடா.
தில் இருந்தா வால ஆட்டுடா.
வெட்டிடுவோம் ஒட்ட நறுக்கி.
தாங்கமாட்ட தளபதியோட வெறிக்கி.
அண்ணன் கண்ணசைசா,
கொதிக்கும்டா கோலிவுட்டு.
பத்துக்கிரும்டா பாலிவுட்டு.
அடுத்த டார்கெட்டு டோலிவுட்டு.
2020ல ஹாலிவுட்டு.
இப்போ இருக்குறது பார்லிமென்ட்டு.
எங்க தளபதி சிரிச்சா தென்றலு.
அடிச்சா புயலு.
புடிச்சா முயலு
கொதிச்சா ஆயிலு.
மவனே,பேசாம போயிரு.
இங்ஙணம்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் M.P. ரசிகர் மன்றம்.
Posted by Raju 19 comments
Labels: அடுத்த அட்டாக், எதிர்ப்பு, சாம் ஆன்டர்சன், ஜீ டிவி
Friday, May 15, 2009
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
எங்க தல சிங்கம்டா…
தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் தலைக்கு சீட் அறிவித்தவுடன் ஆ வென பிளந்த வாய்கள் தான் அனேகம். அவரின் மக்கள் செல்வாக்கு, அரசியல் அனுபவம், பொது சேவைகள் என எதுவும் தெரியாத தற்குறிகள் ஏதோ நாயகன் பட வெற்றிதான் அவருக்கு சீட் வாங்கித் தந்ததாக உளறினார்கள். பாஜகவின் திருநாவுக்கரசரை எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியுமா என்று சொன்னவர்களும் உண்டு.
இதோ எங்க சிங்கம் 3500 வாக்கள் முன்னிலையில் இருக்கிறது. பிராச்சர களத்தில் நாங்கள் குதித்த போது தலைமை எங்களுக்கிட்ட கட்டளை என்னத் தெரியுமா? இப்போதே அதிகம் பேச வேண்டாம். நம் வெற்றி பேசட்டும் என்றார்கள். இதொ கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி.
இது முடிவல்ல..
இது ஆரம்பம்.
இனிமேல் தான் பூகம்பம்….
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 16 comments
Thursday, April 30, 2009
நாளைய வரலாற்றின் வாழ்த்து..!
வருங்கால் நிதியமைச்சர்..!
பதிவுலக பட்டிஷ்டா...!
தமிழக விடிவெள்ளி...!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தன்மான கரடி..!
தேர்தல் சூறாவளி..!
முகவையின் முத்து..!
நம் வலையுலக சொத்து.!
ராமநாதபுரத்து மின்னல்..!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
சின்னப் பகவதி..!
சீறி வரு காளை..!
புரட்சி புறா..!
தன்னலமற்ற தலைவன்..!
நாளைய தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...
இவண்
மன்ற நிர்வாகிகள்..
Posted by Raju 13 comments
Labels: வாழ்த்து.
Sunday, April 12, 2009
தளபதியின் வாழ்த்து..!
நம்ம வீரத்தளபதி அண்ணன் "ஜே.கே.ரித்திஷ்" அவர்களின் அனல் பறக்கும் சூறாவளிப் பிரச்சாரம் இன்னும் சில நாட்களில் இராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது.இராமநாதபுர மக்களே டரியலாகுங்கள்..ச்சே..தயாராகுங்கள். தளபதி அவர்கள் போஸ்டர்களுக்கு ஸ்டில் கொடுக்கும் வேலையில் ஒருகையில் துப்பாக்கியையும் ஒருகையில் வேட்டியையும் பிடித்தபடி பிஸியாக உள்ளார் என கழக உடன்பிறப்புகளும் கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.நம் வீரத்தளபதிக்கு ஆதரவாக,சில திரையுலக முண்ணனி(?) நட்சத்திரங்களும் பிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எதிர்கட்சிகள் "தமிழ் புத்தாண்டு" என்ற ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றன.இருந்தாலும் அண்ணன் அவர்கள் தன் மன்ற நிர்வாகிகளின் மூலம் ரசிகர்களாகிய உங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இதோ அந்த செய்தி:
ம்ம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே...ச்சே இராமநாதபுரமும் நமதே.
இவண்:
மன்ற நிர்வாகிகள்.
Posted by Raju 19 comments
Labels: வாழ்த்து.
Tuesday, April 7, 2009
தளபதிக்கு புதுப் பட்டம்...
கழகக் கண்மணிகளே,
தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது, நம்ம பொருளாளர் அண்ணன் வேற காசு கொடுக்கறேன்னு சொல்லிட்டார்.தேர்தல் பிரச்சாரப் பாடல் வேற எழுதியாகி விட்டது. மீஜிக் போட ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு கழகப் போர்ப்படைத் தளபதி அண்ணன் கார்க்கி சென்றிருப்பதாக தகவல். போஸ்டர் மற்றும் தோரணங்களுக்கு சொல்ல வேண்டும்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நம்முடைய தளபதிக்கு இப்போதுள்ள பட்டங்கள் எல்லாம் சரியாக,அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்தாததாக இருக்கின்றதென பரவலான அதிர்ப்தி நிலவுவதாக எமக்கு தகவல் வந்துள்ளது.ஆகவே,தேர்தலை முன்னிட்டு அவருக்கு புது பட்டம் தருவதற்காக வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடன் ஆய்வு நடத்தவே இந்த பதிவு. சங்கத்து சிங்கங்களும் உங்கள் எண்ணத்தில் இருக்கும் பெயர்களை, அள்ளித்தெளிக்கும்படி மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு.
என்றென்றும் தளபதியின் வழியில் டக்ளஸ்,
தேர்தல் பொறுப்பாளர்.
Posted by Raju 22 comments
Labels: களத்தில்..
தேர்தல் பிரச்சார பாடல்
பல்லவி
கட்டான ஸ்டீல் பாடி..
இதை காண கண் வேண்டும் கோடி.
சரணம் 1
வறியவர் வருவார் உன்னை நாடி.
எதிரிகள் ஒளிவார் ஓடி..
சரணம் 2
யார் இங்க கேடி யார் இங்க கேடி..
நாங்க தான் கேடி, மத்தவனெல்லாம் பேடி..
சரணம் 3
அடுத்த படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி...
அவ தான் எங்க தலைக்கேத்த ஜோடி...
மீண்டும் அதே பல்லவி
வலையுலகில் எங்கள் தலை ஜே.கே ரித்தீஷை கிண்டல் செய்தவர் எல்லாம் ஒடி ஒளியவேண்டும் இப்போது...
தலைக்கு வருகிற பாராளுமன்றத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதில் சீட் கிடைத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா, கலைஞருக்கு மூளை கெட்டுவிட்டது என்று கும்மியடிக்கும் நல்லதந்தி, ப்ளீச்சிங் பவுடர், வாலைபையன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது வேற எதுவும் இல்லை..
ஷட்டப். வெயிட் அண்டு சீ...
ஒரு சின்ன உரையாடலை கவனிங்க...
ச்சின்னப்பையன் : அப்பாடா, எப்படியோ தலைக்கு சீட் கெடைச்சிருச்சி. சீட் கெடைக்கலன்னா உண்ணாவிரதம் இருக்கலாம்னு நினைச்சேன்...:)))))
ராப்: உண்ணாவிரதம் தானே இருக்கப்போற ? அதுக்கு எதுக்கு ஸ்மைலி ? நான் மு.க.ஸ்டாலின் வலைப்பூவுல போய் 'me tha first' 'you the worst' 'give the seat' அப்படீன்னு ஆயிரம் பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.
வால்பையன் : அவாஜ்க்க்க் ஆஅட்ஜூ fffஓ ச்டோஓ ச்ச்ச அவ்வ்வ்வ்...பார்ப்பனர்கள் வாழ்க..பெரியாரும் வாழ்க...நான் ஈரோடு...ஈ ரோடு போயி திருச்சி வந்தா மதுரை. மதுரையில அழகிரி..இது என்னுடைய நூறாவது குவாட்டர்.
புதுகை அப்துல்லா: டேய் என்னடா நாங்க இவ்ளோ சீரியசா பேசிக்கிட்டிருக்கோம், உனக்கு கிண்டலா தெரியுதா ? கார்க்கி, தூக்குடா இவனை...
கார்க்கி : சகா, போர்ப்படை தளபதின்னா கத்திய தூக்கிட்டு அலையனுமா ? அது ஒரு பட்டம்யா. நான் ராமநாதபுரத்துக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பறேன். அங்கியாவது மகளிரணியில ஒரு அட்டு பிகர் சிக்குதா பாப்போம்..
பழமைபேசி: அப்படித்தான் அமெரிக்காவுல ஒருதடவை, பள்ளயத்த பள்ளத்துல ஊத்தி, கோமியத்த கோப்பையில புடிச்சு...
வித்யா : யோவ் நான் கொலைவெறியாவறதுக்குள்ள இதுமாதிரி 'non serious' guys எல்லாரையும் ஆப் பண்ணிங்க. முகவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.
செந்தழல் ரவி: பட்டம் குடுக்குறேன் குடுக்குறேன்னு ஏமாத்திக்கினே இருந்தானுவ. நானே அய்ரோப்பிய கிளைக்கழக செயலாளர் பட்டத்தை எடுத்துக்கவேண்டியதா போச்சு.
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...\
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
செந்தழல் ரவி: வெளங்கீரும் திரு கனேஷ் அவர்களே.
நர்சிம்: ஜூனியர் விகடனில் என்னுடைய முன்னூத்தம்பதாவது ஜோக்கு..
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
பரிசல்: அய்யோ முடியல முடியல.
செந்தழல் ரவி: ஏய் இது வீரத்தளபதி ரசிகர் மன்ற கூட்டமா இல்லையா, பொதுப்பிரசினையை பேசுறத நிறுத்துங்க. தலை இலங்கையில அணுகுண்டு போடுவாரா இல்லையா அதை சொல்லுங்க...
அதிஷா: அய்யோ என்னாலயும் முடியல. இஞ்சி தின்ன குரங்கு, கஞ்சி குடிச்ச கருவாடு எல்லாம் எம்பி எலக்ஷன்ல நின்னா நான் சுண்டக்கஞ்சியா குடிச்சு கவுந்துடுவேன்..
புதுகை அப்துல்லா: அப்பாடா, இவன் ஒருத்தனாவது பாயிண்டுக்கு வந்தானே ?
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 8 comments
Labels: களத்தில்..
Sunday, April 5, 2009
சிங்கம் களமிறங்கிருச்சுடோய்....
கண்களுக்கு எட்டா "கானல் நீர்"....
தாயகம் (?) காக்கும் " நாயகன்"....
முகவையின் "முதல் குடிமகன்"...
அநியாயத்திற்கு எதிரான "அவதாரம்".....
புதுமைகளின் "ஆ'ரம்பம்'"....
தமிழகத்தின் "ஒபாமா"...
தமிழ்த்திரையுலகின் புதிய "பரிணாமம்"...
நம் "வீரத் தளபதி"....
ஜே,கே. ரித்திஷ் அவர்களுக்கு இராமநாதபுரத்தில் நிற்க (உட்கார இல்லை) சீட் தரப்பட்டுள்ளது. என்பதை சங்கத்தின்
சார்பாக மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கப் போகும் இந்த சிங்கத்திற்கு உங்கள் ஆதரவைத் தருவதும் தராததும் உங்கள் இஷ்டம்.
பின் குறிப்பு:இதுவரை டக்ளஸ் எனும் பதிவில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், கழகப் போர்ப் படைத்தளபதி அண்னன் கார்க்கியின் அழைப்பின் பெயரில் இங்கும் கிறுக்குகிறேன் என்பதை என் இந்த முதல் பதிவின் மூலம் தெரிவிக்கின்றேன். ஆகையால், எனக்கு தங்களின் நல் ஆதரவையும் கெட்ட ஆதரவையும் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Posted by Raju 20 comments
Labels: களத்தில்..
Friday, April 3, 2009
சிங்கம் களமிறங்க போகுதுடோய்...
ரசிகர்களே..
தளபதிகளே..
புறப்படுங்கள்..
நம் வீரத்தளபதி இந்த தேர்தலில் பங்கெடுக்க முடிவு செய்திருக்கிறார். ராமனாதபுரம் தொகுதியை எப்படியும் தலைவர் கலைஞர் உண்மையான கலைஞனான நம் தலைவர் ஜே.கே.ஆருக்கே கொடுத்து விடுவார்.
நம்ம பொறுத்தவரை ஜே.கே.ஆர் தான் கலைஞர், அவர் நடிப்பதால்.
ஜே.கே.ஆர். தான் தளபதி. வீரத்தளபதி.
சீட் உறுதி ஆனதும் நம் பிராச்சாரத்தை தொடங்குவோம்.
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 18 comments
Thursday, March 5, 2009
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வீரத்தளபதியின் ஜே.கே.ரித்தீஷின் பிறந்த நாளாம் இன்று. ஹேப்பி பர்த்டே தல:)
Posted by Vidhya Chandrasekaran 18 comments
Friday, February 6, 2009
வீரத்தளபதியின் அடுத்த படம்
தளபதி படத்துக்கப்புறம் நம்ம தலைவர் வீரத்தளபதி ஜே.கே.ஆர் நடிக்கும் அடுத்த படத்தின் கதை கசிந்துள்ளது. மூன்று படங்களிலும் அனல் பறக்க ஆக்ஷன் இருந்ததால், பெண்களை குறிப்பாக இளம்பெண்களை கவரும் விதமாக முழுக்க முழுக்க காதல் சூப்(எத்தன நாள் தான் ரசமே சொட்டும்) ஆறாக ஒடும் யூத் சப்ஜெக்டில் நடிக்கிறார். ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக இரண்டு சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு. படத்தின் ஒன்லைன் இதுதான். மிகவும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸாப்ட்வேர் கம்பெனியில் project manager பதவியில் இருக்கும் ஜே.கே.ஆர்க்கும், அதே கம்பெனியில் HR Executive வேலையில் இருக்கும் அனுஷ்காவிற்க்கு லவ்வோ லவ். அனுஷ்கா அந்த கம்பெனி ஓனரோட பொண்ணு. Recession காரணமாக கம்பெனியை மூட வேண்டிய சூழ்நிலை. இதனால் மனமுடைந்து போன அனுஷ்காவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். காதலியின் தந்தை மரணத்துக்கு பழிவாங்கவும், கம்பெனியை சரிவிலிருந்து மீட்கவும் ஜே.கே.ஆர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே மிச்சக் கதை:)
முதல் பாதி இந்தியாவிலேயே படமாக்கப்படுமாம். கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்து உழைப்பால் முன்னேறுகிறார் வீரத்தளபதி. ஆதலால் காலேஜ் படிக்கும் பையனின் தோற்றத்துக்கு படாத பாடு பட்டு ச்சே கடும் உழைப்பால் மூன்றிலிருந்து மூணேமுக்கால் கிலோ வரை எடை குறைக்க யோசித்திருக்கிறாராம் வீரத்தளபதி. பிற்பாதியில் recessionஐ அழிக்க அதைத் தேடி அமெரிக்கா செல்கிறார். பிற்பாதி முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படும். ஜே.கே.ஆருக்கும், அனுஷ்காவிற்க்கும் உதவும் அமெரிக்க வாழ் தமிழ்பெண்ணாக நடிக்க காத்ரீனா கைஃபிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜே.கே.ஆரும் காத்ரீனாவும் ஆடிப்பாட ஐட்டம் நம்பர் ஒன்றுக்கு இசையமைத்து தருமாறு ரஹ்மான் மிரட்டப்பட்டுள்ளார் ச்சே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ஜே.கே.ஆரும் recessionம் மோதிக் கொ(ல்லும்)ள்ளும் காட்சி பெரும் பொருட்செலவில் உயர்ந்த கிராபிக்ஸ் தரத்தில் படமாக்கவும் முடிவுசெய்துள்ளார்களாம்.
ஜே.கே.ஆரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் அடுத்த பொங்கல் பரிசாக அமையும். மேலும் இந்தப் படத்திற்க்கு பொருத்தமான தலைப்பை ரசிகர்களே பரிந்துரைக்கலாமாம். சிறந்த தலைப்பு மன்றத்தின் மூலம் ஜே.கே.ஆரிடம் பரிந்துரைக்கப்பட்டு தக்க சன்மானம் வழங்கவும் முடிவாகியுள்ளது. ஆகவே சங்கத்து சிங்கங்கள் தங்களின் பொன்னான தலைப்பை அள்ளித்தெளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Posted by Vidhya Chandrasekaran 22 comments