CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 20, 2010

ஜே.கே.ஆர்.MP நடிக்கும் ராஜ்ஜியத்தில் ஒருவன்..(லாஜிக்குடன்)..!

நாயகன், பரபரஅரசியல் அவதாரம், கடகட எம்.பி அரிதாரத்திற்குப் பின், ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட்த்தைப் பார்ர்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி, தன் மன்ற நிர்வாகிகளோடு நம் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்.எம்.பி. அவர்கள் அவருடைய அடுத்த திரைப்படம் குறித்து பெலிடா நாசிகண்டர் மலேசியன் ரெஸ்ட்ராண்டில் கலந்தாலோசிக்கிறார்.

போர்ப்படைத் தளபதி.கார்க்கி,செயலாளர்.வால்பையன்,தேர்தல் பொறுப்பாளர்.ராஜூ ஆகியோர் ஆஜர்.

JKR: என்ன பாஸ், எல்லாரும் சௌக்கியமா..?

அனைவரும் கோரஸாக, ”சௌக்கியம் தளபதி” என்று கத்திய கத்தல் விண்ணைக் கந்தலாக்கியதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா உடன்பிறப்புகளே..!

JKR: இன்னிக்கு டக் ஆஃப் த டவுனே ஆயிரத்தில் ஒருவன் தானே.! ஆக்சுவலி நானும் அந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்றதுக்கு ஆசைப்படுறேன். அதுக்கு, என்னோட நலவிரும்பிகளான(?) உங்களோடு ஆலோசிக்கனும்ன்னு ஆசைப்படுறேன். டெல் மீ யுவர் தாட்ஸ்.

கார்க்கி: அதெல்லாம் ஒன்னும் வேணாம் தலைவரே..! அந்த பட்த்துல் லாஜிக்கே இல்ல. கல்லத் தள்ளி வுடுறானுக. கப்பல்ல போறானுக. ஹெலிகாப்டர் வருது. கத்திச்சண்டை போடுறானுக. ஒரே இம்சைப்பா.

JKR: நீங்க என்ன பாஸ் இப்புடி சொல்லீட்டீங்க...? எல்லாரும் செத்து மடியற ரேஞ்சுக்கு சிலாகிச்சுட்டுருக்காங்களேய்யா..?

ராஜு: ஆனா, தல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.

வால்பையன் திவிரமாக எதனையோ யோசித்துக்கோண்டேயிருக்க, JKR அவரை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

கார்க்கி: அதெல்லாம் வேணாம் தல. ராஜூவுக்கு புடிச்சிருந்தா படத்துல லாஜிக் இருக்குனு அர்த்தமில்லை. அதனால நம்ம வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்குனர் பீரங்கி “பேரரசு”க்கிட்ட சொல்லி ரீமேக் பண்ணீரலாம்.கவலப்படாதீங்க..! மியூஸிக்கு ரகுமான்கிட்ட சொல்லி ஒரு குறுந்தொகையை ரீமிக்ஸ் பண்ணிடலாம்.
பலே வெள்ளையத்தேவா..!

ராஜு: ஆனா, தல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்த்து.

JKR: நீ என்னாய்யா கீழ விழுந்து கீறல் வந்த ரெக்கார்டு மாதிரி ஒரே டயலாக்கயே உளறிட்டு இருக்கேயாயா..? என்னா மேட்டரு..?

ராஜூ, கீழே குனிந்து எதயோ தேடுவது போல, தேடுகின்றார். ( ஃபீல் பண்றாராம்மாம்)

கார்க்கி: ஓய்..ஒய்ய்...(விசிலடிக்கிறார்)

JKR, கார்க்கியை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு, மீண்டும் வால்பையன் யோசித்துக் கொண்டேயிருப்பதைப் பார்த்து டரியலாகிறார்.

ராஜு: தல, ஒன்னுமேயில்லை.ஒருவன்னு முடியுற எல்லா படமும் சர்ச்சைய உண்டுபண்ணி வெற்றியடைஞ்சுரும்னு கண்ணான்னு ஒருத்தரு சொன்னாரு. அதுனால உங்க பட்த்துக்கு பூஜ்ஜி..ச்சே..”ராஜ்ஜியத்தில் ஒருவன்”னு பேர் வச்சிரலாம் தல. இசையருவில நீங்க வந்து லைவ்ல பேசுங்க. அப்படியே கலைஞரையும் போன் பண்ணச் சொல்லீட்டா
சும்மா அதிரமுல்ல..?

JKR: அய், இந்த மேட்டர் நல்லாருக்கே, கதையச் சொல்லுய்யா..! ஸ்கிரிப்ட் சொல்லு..!

ராஜு: ஸ்கிரிப்ட் எல்லாம் எதுக்கு தலைவரே, ஒரே ஒரு ஒன்லைனர் இருந்தா சூட்டிங் போயிரலாமே..!

வால்பையன் மட்டும் இன்னும் யோசித்தபடியே, நிலைகுத்திய கண்களுடன்...

கார்க்கி: தல, இந்த ராஜுன்றவனோட பேச்சை நம்பாதீங்க.கவுத்தீருவான். ஸ்கிரிப்ட் முழுசா ரெடி பண்ணிட்டுதான் சூட்டிங் போகனும்ன்றதுதான் டைரக்‌ஷன்ல பால பாடம். இப்பிடித்தான் ஜேம்ஸ்கேமரூன் 96% பட்த்த முடிச்சார்.

JKR: அது யாருங்க பாஸ்..? ஜூஸ் கம்ர்க்கட்டு..?

கார்க்கி தலையடித்துக் கொள்கிறார்.

ராஜு: கார்க்கிண்ணா, பாலா படமா இருந்தா என்ன..? அமீர் படமா இருந்தா என்ன..? நம்ம செல்வராகவன் படத்த்தானே உல்டா பண்ணப் போறோம். பாலாவையெல்லாம் ஏன் இழுக்குறீங்க..?

கார்க்கி மீண்டும் அஜித்திலடித்துக் கொள்கிறார்.

JKR “இது தேவையா..?” என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு மூவரையும் வெறித்துப்பார்க்கிறார்.
இவ்வளவு களேபரத்திலும் வால்பையன் மட்டும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார். JKR அவரைத் தோளில் தட்டி, “என்ன” என்பது போல் பார்க்கிறார். இனி வால்ஸ் மியூசிக் ஸ்டார்ஸ்...!

வால்பையன்: தலைவரே, இந்த படத்த நம்ம கொஞ்சம் பகுத்தறிவோட அணுகினோம்ன்னா, சண்டைக்கு காரணமே பாண்டிய குடும்பத்தின் குலதெயவச்சிலைதான்.ஆக, கடவுள்ன்னு ஒருத்தர் வந்தாலே பிரச்சனைதான்னு டைரக்டர் மறைமுகமா சொல்லவர்றார். அதுனால, இது அப்பட்டமான ஒரு அக்மார்க் ஆன்மீகப்படம். இது என்னோட பார்வை மட்டுமே..!

JKR: என்ன பாஸ் உங்க பார்வை பெரிய கொலைவெறிப்பார்வையா இருக்கே..!

வால்பையன் ஒரு சிறிய புன்முறுவலோடு, தன் நண்பர் ஒருவருக்கு போன் செய்து, ஜே.கே.ஆருடன் பேசும்படிச் சொல்லித் தருகின்றார்.

கார்க்கியும் ராஜுவும் முழித்துக் கொண்டே,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.

அந்த போன் ஆசாமியுடன் பேச்சு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, ”ஆணியே புடுங்க வேணாம் சாமி..” ரேஞ்சுக்கு எகிறி, ரெஸ்ட்டாரண்டின் ஒருபகுதி இருட்டில் எகிறி ஓடி மறைகின்றார் JKR.

பிறகு,வால்பையன் சொல்லித்தான் அந்த போன் ஆசாமி கும்க்கி எனவும் அவர் ஜே.கே.ஆருடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் பேசியுள்ளார் என்பதும் கார்க்கிக்கும் ராஜுவுக்கும் தெரியும்.

உரிமைதுறப்பான்: நிகழ்வில் வரும் சம்பவங்களும் பெயர்களும் 100% கற்பனையே..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠