கழகக் கண்மணிகளே,
தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது, நம்ம பொருளாளர் அண்ணன் வேற காசு கொடுக்கறேன்னு சொல்லிட்டார்.தேர்தல் பிரச்சாரப் பாடல் வேற எழுதியாகி விட்டது. மீஜிக் போட ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு கழகப் போர்ப்படைத் தளபதி அண்ணன் கார்க்கி சென்றிருப்பதாக தகவல். போஸ்டர் மற்றும் தோரணங்களுக்கு சொல்ல வேண்டும்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நம்முடைய தளபதிக்கு இப்போதுள்ள பட்டங்கள் எல்லாம் சரியாக,அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்தாததாக இருக்கின்றதென பரவலான அதிர்ப்தி நிலவுவதாக எமக்கு தகவல் வந்துள்ளது.ஆகவே,தேர்தலை முன்னிட்டு அவருக்கு புது பட்டம் தருவதற்காக வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடன் ஆய்வு நடத்தவே இந்த பதிவு. சங்கத்து சிங்கங்களும் உங்கள் எண்ணத்தில் இருக்கும் பெயர்களை, அள்ளித்தெளிக்கும்படி மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு.
என்றென்றும் தளபதியின் வழியில் டக்ளஸ்,
தேர்தல் பொறுப்பாளர்.
Tuesday, April 7, 2009
தளபதிக்கு புதுப் பட்டம்...
Posted by Raju 22 comments
Labels: களத்தில்..
தேர்தல் பிரச்சார பாடல்
பல்லவி
கட்டான ஸ்டீல் பாடி..
இதை காண கண் வேண்டும் கோடி.
சரணம் 1
வறியவர் வருவார் உன்னை நாடி.
எதிரிகள் ஒளிவார் ஓடி..
சரணம் 2
யார் இங்க கேடி யார் இங்க கேடி..
நாங்க தான் கேடி, மத்தவனெல்லாம் பேடி..
சரணம் 3
அடுத்த படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி...
அவ தான் எங்க தலைக்கேத்த ஜோடி...
மீண்டும் அதே பல்லவி
வலையுலகில் எங்கள் தலை ஜே.கே ரித்தீஷை கிண்டல் செய்தவர் எல்லாம் ஒடி ஒளியவேண்டும் இப்போது...
தலைக்கு வருகிற பாராளுமன்றத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதில் சீட் கிடைத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா, கலைஞருக்கு மூளை கெட்டுவிட்டது என்று கும்மியடிக்கும் நல்லதந்தி, ப்ளீச்சிங் பவுடர், வாலைபையன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது வேற எதுவும் இல்லை..
ஷட்டப். வெயிட் அண்டு சீ...
ஒரு சின்ன உரையாடலை கவனிங்க...
ச்சின்னப்பையன் : அப்பாடா, எப்படியோ தலைக்கு சீட் கெடைச்சிருச்சி. சீட் கெடைக்கலன்னா உண்ணாவிரதம் இருக்கலாம்னு நினைச்சேன்...:)))))
ராப்: உண்ணாவிரதம் தானே இருக்கப்போற ? அதுக்கு எதுக்கு ஸ்மைலி ? நான் மு.க.ஸ்டாலின் வலைப்பூவுல போய் 'me tha first' 'you the worst' 'give the seat' அப்படீன்னு ஆயிரம் பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.
வால்பையன் : அவாஜ்க்க்க் ஆஅட்ஜூ fffஓ ச்டோஓ ச்ச்ச அவ்வ்வ்வ்...பார்ப்பனர்கள் வாழ்க..பெரியாரும் வாழ்க...நான் ஈரோடு...ஈ ரோடு போயி திருச்சி வந்தா மதுரை. மதுரையில அழகிரி..இது என்னுடைய நூறாவது குவாட்டர்.
புதுகை அப்துல்லா: டேய் என்னடா நாங்க இவ்ளோ சீரியசா பேசிக்கிட்டிருக்கோம், உனக்கு கிண்டலா தெரியுதா ? கார்க்கி, தூக்குடா இவனை...
கார்க்கி : சகா, போர்ப்படை தளபதின்னா கத்திய தூக்கிட்டு அலையனுமா ? அது ஒரு பட்டம்யா. நான் ராமநாதபுரத்துக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பறேன். அங்கியாவது மகளிரணியில ஒரு அட்டு பிகர் சிக்குதா பாப்போம்..
பழமைபேசி: அப்படித்தான் அமெரிக்காவுல ஒருதடவை, பள்ளயத்த பள்ளத்துல ஊத்தி, கோமியத்த கோப்பையில புடிச்சு...
வித்யா : யோவ் நான் கொலைவெறியாவறதுக்குள்ள இதுமாதிரி 'non serious' guys எல்லாரையும் ஆப் பண்ணிங்க. முகவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.
செந்தழல் ரவி: பட்டம் குடுக்குறேன் குடுக்குறேன்னு ஏமாத்திக்கினே இருந்தானுவ. நானே அய்ரோப்பிய கிளைக்கழக செயலாளர் பட்டத்தை எடுத்துக்கவேண்டியதா போச்சு.
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...\
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
செந்தழல் ரவி: வெளங்கீரும் திரு கனேஷ் அவர்களே.
நர்சிம்: ஜூனியர் விகடனில் என்னுடைய முன்னூத்தம்பதாவது ஜோக்கு..
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
பரிசல்: அய்யோ முடியல முடியல.
செந்தழல் ரவி: ஏய் இது வீரத்தளபதி ரசிகர் மன்ற கூட்டமா இல்லையா, பொதுப்பிரசினையை பேசுறத நிறுத்துங்க. தலை இலங்கையில அணுகுண்டு போடுவாரா இல்லையா அதை சொல்லுங்க...
அதிஷா: அய்யோ என்னாலயும் முடியல. இஞ்சி தின்ன குரங்கு, கஞ்சி குடிச்ச கருவாடு எல்லாம் எம்பி எலக்ஷன்ல நின்னா நான் சுண்டக்கஞ்சியா குடிச்சு கவுந்துடுவேன்..
புதுகை அப்துல்லா: அப்பாடா, இவன் ஒருத்தனாவது பாயிண்டுக்கு வந்தானே ?
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 8 comments
Labels: களத்தில்..
Sunday, April 5, 2009
சிங்கம் களமிறங்கிருச்சுடோய்....
கண்களுக்கு எட்டா "கானல் நீர்"....
தாயகம் (?) காக்கும் " நாயகன்"....
முகவையின் "முதல் குடிமகன்"...
அநியாயத்திற்கு எதிரான "அவதாரம்".....
புதுமைகளின் "ஆ'ரம்பம்'"....
தமிழகத்தின் "ஒபாமா"...
தமிழ்த்திரையுலகின் புதிய "பரிணாமம்"...
நம் "வீரத் தளபதி"....
ஜே,கே. ரித்திஷ் அவர்களுக்கு இராமநாதபுரத்தில் நிற்க (உட்கார இல்லை) சீட் தரப்பட்டுள்ளது. என்பதை சங்கத்தின்
சார்பாக மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கப் போகும் இந்த சிங்கத்திற்கு உங்கள் ஆதரவைத் தருவதும் தராததும் உங்கள் இஷ்டம்.
பின் குறிப்பு:இதுவரை டக்ளஸ் எனும் பதிவில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், கழகப் போர்ப் படைத்தளபதி அண்னன் கார்க்கியின் அழைப்பின் பெயரில் இங்கும் கிறுக்குகிறேன் என்பதை என் இந்த முதல் பதிவின் மூலம் தெரிவிக்கின்றேன். ஆகையால், எனக்கு தங்களின் நல் ஆதரவையும் கெட்ட ஆதரவையும் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Posted by Raju 20 comments
Labels: களத்தில்..
Friday, April 3, 2009
சிங்கம் களமிறங்க போகுதுடோய்...
ரசிகர்களே..
தளபதிகளே..
புறப்படுங்கள்..
நம் வீரத்தளபதி இந்த தேர்தலில் பங்கெடுக்க முடிவு செய்திருக்கிறார். ராமனாதபுரம் தொகுதியை எப்படியும் தலைவர் கலைஞர் உண்மையான கலைஞனான நம் தலைவர் ஜே.கே.ஆருக்கே கொடுத்து விடுவார்.
நம்ம பொறுத்தவரை ஜே.கே.ஆர் தான் கலைஞர், அவர் நடிப்பதால்.
ஜே.கே.ஆர். தான் தளபதி. வீரத்தளபதி.
சீட் உறுதி ஆனதும் நம் பிராச்சாரத்தை தொடங்குவோம்.
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 18 comments
Thursday, March 5, 2009
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வீரத்தளபதியின் ஜே.கே.ரித்தீஷின் பிறந்த நாளாம் இன்று. ஹேப்பி பர்த்டே தல:)
Posted by Vidhya Chandrasekaran 18 comments
Friday, February 6, 2009
வீரத்தளபதியின் அடுத்த படம்
தளபதி படத்துக்கப்புறம் நம்ம தலைவர் வீரத்தளபதி ஜே.கே.ஆர் நடிக்கும் அடுத்த படத்தின் கதை கசிந்துள்ளது. மூன்று படங்களிலும் அனல் பறக்க ஆக்ஷன் இருந்ததால், பெண்களை குறிப்பாக இளம்பெண்களை கவரும் விதமாக முழுக்க முழுக்க காதல் சூப்(எத்தன நாள் தான் ரசமே சொட்டும்) ஆறாக ஒடும் யூத் சப்ஜெக்டில் நடிக்கிறார். ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக இரண்டு சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு. படத்தின் ஒன்லைன் இதுதான். மிகவும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸாப்ட்வேர் கம்பெனியில் project manager பதவியில் இருக்கும் ஜே.கே.ஆர்க்கும், அதே கம்பெனியில் HR Executive வேலையில் இருக்கும் அனுஷ்காவிற்க்கு லவ்வோ லவ். அனுஷ்கா அந்த கம்பெனி ஓனரோட பொண்ணு. Recession காரணமாக கம்பெனியை மூட வேண்டிய சூழ்நிலை. இதனால் மனமுடைந்து போன அனுஷ்காவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். காதலியின் தந்தை மரணத்துக்கு பழிவாங்கவும், கம்பெனியை சரிவிலிருந்து மீட்கவும் ஜே.கே.ஆர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே மிச்சக் கதை:)
முதல் பாதி இந்தியாவிலேயே படமாக்கப்படுமாம். கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்து உழைப்பால் முன்னேறுகிறார் வீரத்தளபதி. ஆதலால் காலேஜ் படிக்கும் பையனின் தோற்றத்துக்கு படாத பாடு பட்டு ச்சே கடும் உழைப்பால் மூன்றிலிருந்து மூணேமுக்கால் கிலோ வரை எடை குறைக்க யோசித்திருக்கிறாராம் வீரத்தளபதி. பிற்பாதியில் recessionஐ அழிக்க அதைத் தேடி அமெரிக்கா செல்கிறார். பிற்பாதி முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படும். ஜே.கே.ஆருக்கும், அனுஷ்காவிற்க்கும் உதவும் அமெரிக்க வாழ் தமிழ்பெண்ணாக நடிக்க காத்ரீனா கைஃபிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜே.கே.ஆரும் காத்ரீனாவும் ஆடிப்பாட ஐட்டம் நம்பர் ஒன்றுக்கு இசையமைத்து தருமாறு ரஹ்மான் மிரட்டப்பட்டுள்ளார் ச்சே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ஜே.கே.ஆரும் recessionம் மோதிக் கொ(ல்லும்)ள்ளும் காட்சி பெரும் பொருட்செலவில் உயர்ந்த கிராபிக்ஸ் தரத்தில் படமாக்கவும் முடிவுசெய்துள்ளார்களாம்.
ஜே.கே.ஆரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் அடுத்த பொங்கல் பரிசாக அமையும். மேலும் இந்தப் படத்திற்க்கு பொருத்தமான தலைப்பை ரசிகர்களே பரிந்துரைக்கலாமாம். சிறந்த தலைப்பு மன்றத்தின் மூலம் ஜே.கே.ஆரிடம் பரிந்துரைக்கப்பட்டு தக்க சன்மானம் வழங்கவும் முடிவாகியுள்ளது. ஆகவே சங்கத்து சிங்கங்கள் தங்களின் பொன்னான தலைப்பை அள்ளித்தெளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Posted by Vidhya Chandrasekaran 22 comments
Wednesday, December 24, 2008
மன்றத்து அறிவிப்பு.. பரிசை வென்றது யார்?
போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது
ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தப் பதிவு எழுதிய அண்ணன் வால்பையன் அவர்கள் சங்கத்து செயலாளராக நியமிக்கப் படிகிறார்.
**************************************
பல தடைகளையும்!! தாண்டி, பலத்த எதிர்பார்ப்புகளோடு, எதிரிகளின் மூஞ்சியில் கரியை பூசும் அளவுக்கு நமது தென்னக டாம் குரூஸ், ஒலகநாயகன் ரித்தீஷ் அவர்கள் நடித்த நாயகன் படம் ஈரோட்டில் வெளிவந்தது விட்டது, இனிவரும் அறுபது நாட்களுக்கு ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி விட்டதால் அதுவரை படம் பார்க்க இயலாத நிலையில் இருக்கிறேன். மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது, அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் நேற்று தொலைக்காட்சியில் தலைவர் படத்திலிருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.
பல முன்னணி நடிகர்கள் கூட செய்திராத வகையில் ஒரு பாடலுக்கே, ஒரு முழு படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று, அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.
இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே! நடிக்கும் இரண்டாவது படத்திலேயே நடனத்தில் பல புதுமைகளை புகுத்தி பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.
வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.
அந்த வரிகள்
இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,
இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடு என்றும், கற்ற கல்வியை கல்லாதவர்களுக்கு சொல்லிக்கொடு என்றும் சமுதாயத்தின் தற்போதைய தேவையை தமது பாட்டின் மூலமாக கொண்டிருப்பது, தலைவரின் சேவை உணர்ச்சியை எடுத்து காட்டுகிறது.
எங்கள் தலைவர் படத்தை நாங்கள் ஓட்டிவிடுவோம்
(தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்)
ஆனால் மற்ற ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.
********************************************************************************
மேலும் போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது
அனைவருக்கும் ஜே.கே.ஆர் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 33 comments