கழகக் கண்மணிகளே,
தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது, நம்ம பொருளாளர் அண்ணன் வேற காசு கொடுக்கறேன்னு சொல்லிட்டார்.தேர்தல் பிரச்சாரப் பாடல் வேற எழுதியாகி விட்டது. மீஜிக் போட ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு கழகப் போர்ப்படைத் தளபதி அண்ணன் கார்க்கி சென்றிருப்பதாக தகவல். போஸ்டர் மற்றும் தோரணங்களுக்கு சொல்ல வேண்டும்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நம்முடைய தளபதிக்கு இப்போதுள்ள பட்டங்கள் எல்லாம் சரியாக,அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்தாததாக இருக்கின்றதென பரவலான அதிர்ப்தி நிலவுவதாக எமக்கு தகவல் வந்துள்ளது.ஆகவே,தேர்தலை முன்னிட்டு அவருக்கு புது பட்டம் தருவதற்காக வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடன் ஆய்வு நடத்தவே இந்த பதிவு. சங்கத்து சிங்கங்களும் உங்கள் எண்ணத்தில் இருக்கும் பெயர்களை, அள்ளித்தெளிக்கும்படி மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு.
என்றென்றும் தளபதியின் வழியில் டக்ளஸ்,
தேர்தல் பொறுப்பாளர்.
Tuesday, April 7, 2009
தளபதிக்கு புதுப் பட்டம்...
Posted by Raju 22 comments
Labels: களத்தில்..
தேர்தல் பிரச்சார பாடல்
பல்லவி
கட்டான ஸ்டீல் பாடி..
இதை காண கண் வேண்டும் கோடி.
சரணம் 1
வறியவர் வருவார் உன்னை நாடி.
எதிரிகள் ஒளிவார் ஓடி..
சரணம் 2
யார் இங்க கேடி யார் இங்க கேடி..
நாங்க தான் கேடி, மத்தவனெல்லாம் பேடி..
சரணம் 3
அடுத்த படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி...
அவ தான் எங்க தலைக்கேத்த ஜோடி...
மீண்டும் அதே பல்லவி
வலையுலகில் எங்கள் தலை ஜே.கே ரித்தீஷை கிண்டல் செய்தவர் எல்லாம் ஒடி ஒளியவேண்டும் இப்போது...
தலைக்கு வருகிற பாராளுமன்றத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதில் சீட் கிடைத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா, கலைஞருக்கு மூளை கெட்டுவிட்டது என்று கும்மியடிக்கும் நல்லதந்தி, ப்ளீச்சிங் பவுடர், வாலைபையன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது வேற எதுவும் இல்லை..
ஷட்டப். வெயிட் அண்டு சீ...
ஒரு சின்ன உரையாடலை கவனிங்க...
ச்சின்னப்பையன் : அப்பாடா, எப்படியோ தலைக்கு சீட் கெடைச்சிருச்சி. சீட் கெடைக்கலன்னா உண்ணாவிரதம் இருக்கலாம்னு நினைச்சேன்...:)))))
ராப்: உண்ணாவிரதம் தானே இருக்கப்போற ? அதுக்கு எதுக்கு ஸ்மைலி ? நான் மு.க.ஸ்டாலின் வலைப்பூவுல போய் 'me tha first' 'you the worst' 'give the seat' அப்படீன்னு ஆயிரம் பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.
வால்பையன் : அவாஜ்க்க்க் ஆஅட்ஜூ fffஓ ச்டோஓ ச்ச்ச அவ்வ்வ்வ்...பார்ப்பனர்கள் வாழ்க..பெரியாரும் வாழ்க...நான் ஈரோடு...ஈ ரோடு போயி திருச்சி வந்தா மதுரை. மதுரையில அழகிரி..இது என்னுடைய நூறாவது குவாட்டர்.
புதுகை அப்துல்லா: டேய் என்னடா நாங்க இவ்ளோ சீரியசா பேசிக்கிட்டிருக்கோம், உனக்கு கிண்டலா தெரியுதா ? கார்க்கி, தூக்குடா இவனை...
கார்க்கி : சகா, போர்ப்படை தளபதின்னா கத்திய தூக்கிட்டு அலையனுமா ? அது ஒரு பட்டம்யா. நான் ராமநாதபுரத்துக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பறேன். அங்கியாவது மகளிரணியில ஒரு அட்டு பிகர் சிக்குதா பாப்போம்..
பழமைபேசி: அப்படித்தான் அமெரிக்காவுல ஒருதடவை, பள்ளயத்த பள்ளத்துல ஊத்தி, கோமியத்த கோப்பையில புடிச்சு...
வித்யா : யோவ் நான் கொலைவெறியாவறதுக்குள்ள இதுமாதிரி 'non serious' guys எல்லாரையும் ஆப் பண்ணிங்க. முகவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.
செந்தழல் ரவி: பட்டம் குடுக்குறேன் குடுக்குறேன்னு ஏமாத்திக்கினே இருந்தானுவ. நானே அய்ரோப்பிய கிளைக்கழக செயலாளர் பட்டத்தை எடுத்துக்கவேண்டியதா போச்சு.
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...\
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
செந்தழல் ரவி: வெளங்கீரும் திரு கனேஷ் அவர்களே.
நர்சிம்: ஜூனியர் விகடனில் என்னுடைய முன்னூத்தம்பதாவது ஜோக்கு..
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
பரிசல்: அய்யோ முடியல முடியல.
செந்தழல் ரவி: ஏய் இது வீரத்தளபதி ரசிகர் மன்ற கூட்டமா இல்லையா, பொதுப்பிரசினையை பேசுறத நிறுத்துங்க. தலை இலங்கையில அணுகுண்டு போடுவாரா இல்லையா அதை சொல்லுங்க...
அதிஷா: அய்யோ என்னாலயும் முடியல. இஞ்சி தின்ன குரங்கு, கஞ்சி குடிச்ச கருவாடு எல்லாம் எம்பி எலக்ஷன்ல நின்னா நான் சுண்டக்கஞ்சியா குடிச்சு கவுந்துடுவேன்..
புதுகை அப்துல்லா: அப்பாடா, இவன் ஒருத்தனாவது பாயிண்டுக்கு வந்தானே ?
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 8 comments
Labels: களத்தில்..
Sunday, April 5, 2009
சிங்கம் களமிறங்கிருச்சுடோய்....
கண்களுக்கு எட்டா "கானல் நீர்"....
தாயகம் (?) காக்கும் " நாயகன்"....
முகவையின் "முதல் குடிமகன்"...
அநியாயத்திற்கு எதிரான "அவதாரம்".....
புதுமைகளின் "ஆ'ரம்பம்'"....
தமிழகத்தின் "ஒபாமா"...
தமிழ்த்திரையுலகின் புதிய "பரிணாமம்"...
நம் "வீரத் தளபதி"....
ஜே,கே. ரித்திஷ் அவர்களுக்கு இராமநாதபுரத்தில் நிற்க (உட்கார இல்லை) சீட் தரப்பட்டுள்ளது. என்பதை சங்கத்தின்
சார்பாக மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கப் போகும் இந்த சிங்கத்திற்கு உங்கள் ஆதரவைத் தருவதும் தராததும் உங்கள் இஷ்டம்.
பின் குறிப்பு:இதுவரை டக்ளஸ் எனும் பதிவில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், கழகப் போர்ப் படைத்தளபதி அண்னன் கார்க்கியின் அழைப்பின் பெயரில் இங்கும் கிறுக்குகிறேன் என்பதை என் இந்த முதல் பதிவின் மூலம் தெரிவிக்கின்றேன். ஆகையால், எனக்கு தங்களின் நல் ஆதரவையும் கெட்ட ஆதரவையும் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Posted by Raju 20 comments
Labels: களத்தில்..